follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கை

Published on

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மார்ச் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் குழந்தகைள் பால்மா ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி 6 சதவீதமாகவும் மேலும், பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் பாகங்கள் ஆகியவற்றுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், குளியலறை உபகரணங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் மரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார்...

மே மாதத்தில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர்...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ'...