follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP2அநுர குமாரவிடம் மற்றுமொரு புதிய தொகுதி 'பைல்ஸ்"

அநுர குமாரவிடம் மற்றுமொரு புதிய தொகுதி ‘பைல்ஸ்”

Published on

பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் (பைல்கள்) தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் மோசடி மற்றும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அவர்களும் மோசடி மற்றும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதால் அவர்கள் பயந்து போயுள்ளனரென்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மோசடி-ஊழல் கோப்புகள் போன்ற பெரிய அளவிலான ஊழல் வழக்குகளிலும் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி மேலும் கூறியதாவது:

“.. பழைய மோசடிகள் மற்றும் ஊழல்கள், புதிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து எங்களுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவில் சில கோப்புகள் தற்போது “மறைக்கப்பட்டுள்ளன”. மற்றவைகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அலுமாரியில் சிக்கியுள்ளன. மேலும் முறைப்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேசையில் உள்ளன.

இவை அனைத்தும் பொதுச் சொத்துக்களுக்கு எதிரான பெரிய அளவிலான குற்றங்களின் வரலாற்றைக் காட்டுகிறது. இதற்கெல்லாம் காரணமானவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன் செல்ல வேண்டும். குறிப்பாக தேசிய மக்கள் படையின் கட்டுப்பாட்டில் இதற்கு காரணமான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். என்னிடம் உள்ள “கோப்பு” குறித்து ஜனாதிபதி மட்டுமல்ல அமைச்சர்களும் பயப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது அவர்களின் பயம். அந்த அளவுக்கு இந்த நாட்டின் சொத்துக்களையும், பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூன் 17 பரிசீலனைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற...

ஹஜ், உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி – இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை...