பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று ( 01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியும் எனவும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும், தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு 4% ஐ தாண்டவில்லை என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
லங்கா ஓட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.