எரிவாயு விலைகள் குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலை குறையவில்லை என பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும் உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை எனவும் மா விலை அதிகரிக்கும் போது உற்பத்திப் பொருட்களின் விலைகளை மாத்திரமே அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, கோதுமை மாவின் விலை குறையும் பட்சத்தில், பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.