கச்சதீவு பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளது இதன் காரணமாக மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கச்சதீவு விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
கச்சதீவு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என நான் கருதவில்லை எனவும் கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.