follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP2ரஷ்ய விபச்சாரிகளுடன் உறவு : விவரித்த உதயங்க

ரஷ்ய விபச்சாரிகளுடன் உறவு : விவரித்த உதயங்க

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் விளையாடிய இரட்டை ஆட்டம் பசில் ராஜபக்சவுக்கு தெரியவந்தது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ விரைவில் நியமிக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

தனியார் இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த அமைச்சர்கள் குழுவையும் அவர் இதன்போது வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;

“.. மைத்திரிபால சிறிசேன 2015ம் ஆண்டில் எம்முடன் ஒன்றாகவே வைன், விஸ்கி குடித்தார். அது மட்டுமல்ல ரஷ்யாவுக்கு வந்தபோது ஏனையவற்றிலும் தேர்ச்சி பெற்றார். ரஷ்யாவுக்கு வரும் அனைத்து அமைச்சர்களும் அங்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம். அது நடக்கும். மைத்திரிபால சிறிசேனவுக்கும் அது பொருந்தும். நான் யாருக்கும் சப்ளை பண்ணவில்லை. ஆனால் விபச்சாரிகளுடன் இருந்தார்கள் என்பது உண்மை. அதில் மறைக்க எதுவுமில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...