ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் விளையாடிய இரட்டை ஆட்டம் பசில் ராஜபக்சவுக்கு தெரியவந்தது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ விரைவில் நியமிக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
தனியார் இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த அமைச்சர்கள் குழுவையும் அவர் இதன்போது வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;
“.. மைத்திரிபால சிறிசேன 2015ம் ஆண்டில் எம்முடன் ஒன்றாகவே வைன், விஸ்கி குடித்தார். அது மட்டுமல்ல ரஷ்யாவுக்கு வந்தபோது ஏனையவற்றிலும் தேர்ச்சி பெற்றார். ரஷ்யாவுக்கு வரும் அனைத்து அமைச்சர்களும் அங்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம். அது நடக்கும். மைத்திரிபால சிறிசேனவுக்கும் அது பொருந்தும். நான் யாருக்கும் சப்ளை பண்ணவில்லை. ஆனால் விபச்சாரிகளுடன் இருந்தார்கள் என்பது உண்மை. அதில் மறைக்க எதுவுமில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.