follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP2'அரசியலில் இருந்து விடைபெறுகிறேன்..'

‘அரசியலில் இருந்து விடைபெறுகிறேன்..’

Published on

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே எனவும் அதற்காக இயன்றளவு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து அரசியலில் ஈடுபட தமக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலேயே அரசியலில் இருந்து விலக நினைத்தேன் என்றும், தான் தொடங்கிய திட்டங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது வயோதிகமாக உள்ளதால், உடல் பலவீனமாக இருப்பதாக கருதுவதால், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...