follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

Published on

கொழும்பு 07 இல் உள்ள Odel வணிக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களை, விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை நேற்று (08) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவை சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நபர், குறித்த துணிக்கடையில் இருந்து பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்று தள்ளுபடி செய்து விற்பனை செய்துள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன்...