குருணாகல் – ஹெட்டிபொல பகுதியில் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையொன்று உடைந்து வீழ்ந்ததில் 8 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.