ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் சென்ற ரயில்

308

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது தடுப்பை மீறி மேடையுடன் மோதி ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது.

ரயில் பணியாளர்கள் உரிய இடத்தில் ரயிலை நிறுத்த தவறியமையினால், குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here