ஆறு தினங்களில் 235 மில்லியன் ரூபா வருமானம்

231

இவ்வருடம் புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகளால் பெறப்பட்ட வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் நேற்று வரையான (15) ஆறு தினங்களில் அதிவேக வீதிகளின் ஊடாக பெறப்பட்ட வருமானம் 235 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here