follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2கோட்டாவின் பினாமியா பியூமி ஹன்சமாலி?

கோட்டாவின் பினாமியா பியூமி ஹன்சமாலி?

Published on

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் தற்போது பியுமி ஹன்சமாலி பயன்படுத்தி வருவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மகென் ரட்டட அமைப்பினால் இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சஞ்சய் மஹவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“தேர்தல் வெகு சீக்கிரமே வரும் போல இருக்கிறது. தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளின் மறைமுகமாக மறைத்திருக்கும் பணம் வெளிவரும். பியூமி ஹன்சமாலி மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. கோட்டாபயவின் ஜீப்பை பியூமி ஹன்சமாலி வாங்கியிருக்க வேண்டும் அல்லது பியூமி ஹன்சமாலி கோட்டாபயவிடம் கொடுத்திருக்க வேண்டும்.

எனவே, கோட்டாபயவின் ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எப்படி வாங்கினார் அல்லது கோட்டாபய அவருக்கு கொடுத்தாரா அல்லது அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் தேர்தலுக்கு அரசியல்வாதிகள் எப்படி பணம் செலவழிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க நடிகர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவு விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் – கோப் குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது. ஸ்ரீ...

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம்...