புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

168

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரன்வல படையணியுடன் இணைந்து மூத்த பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தியதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here