follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published on

மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு, திருப்பி அனுப்பியது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய , மியான்மார் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கடத்தப்பட்ட இலங்கையர்களை 2024, ஏப்ரல் 4 அன்று மீட்டனர்.

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பானது, ஏற்பாட்டில் தொடர்பிலான உதவிகளை வழங்கியது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம், மியான்மரை தளமாகக் கொண்ட ஈடன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மியாவாடி காவல் நிலையத்தில் அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தபோது அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கியது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் மற்றும் இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) உட்பட்ட ஏனைய பங்காளர்களுக்கு, இவ்விடயத்தில் வழங்கிய உதவிகளுக்கு, தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...