ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலி முகத்திடலில் சங்கரில்லா பசுமை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2024” தமிழ், சிங்களப் புத்தாண்டின் அழகன்-அழகிப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் ஏப்ரல் 23 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் 3 மாதங்களுக்குள் பிடித்த வர்ணப் புகைப்படத்துடன் பெயர், வயது, உயரம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை 23 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் 0771557146 எனும் வட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். சகல விண்ணப்பதாரிகளும் 18-30 வயதிற்குட்பட்ட திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். தமிழர் கலாச்சார உடையிலும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
வசத் சிரிய” ஸ்டேன்டட் சைக்கிள் ஓட்டப் போட்டி (ஆண்கள்/பெண்கள்) வயதெல்லையின்றி நடத்தப்படும். இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
ஆண்களுக்கான ஸ்டேன்டட் சைக்கிள் சவாரி காலி முகத் திடலில் இருந்து ஆரம்பமாகி நீர்கொழும்பு வீதி, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை, வெயங்கொடை, நிட்டம்புவ, கண்டி வீதி, கடவத்தை, பேலியகொட ஊடாகச் சென்று மீண்டும் காலி முகத்திடலில் நிறைவடையும்.
மகளிர் பிரிவுக்கான போட்டி காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகி பாமண்கட, பிலியந்தலை, கெஸ்பேவ, கொட்டாவ, மஹரகம, நுகேகொட, தும்முல்ல சந்தி, பித்தளைச் சந்தி, லேக்ஹவுஸ் ஊடாக பயணித்து மீண்டும் காலி முகத்திடலில் நிறைவடையும்.
இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டாண்டர்ட் சைக்கிள்களில் முன் மற்றும் பின் கியர்கள் 48 மற்றும் 18, ஹேண்டில்பார் ரெஸ்ட் பார்/ஹேக் பார் என்பவற்றைப் பயன்டுத்த தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கிறது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தாங்கள் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக அரச பதிவு செய்த மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று, “Syria 2024 Cycling Race, Sri Lanka Air Force Base.Colombo.” எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அல்லது, இலங்கை விமானப்படை முகாமின் கொழும்பு பிரதான பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஸ்கேன் செய்து 070-3166384 என்ற தொலைபேசி எண்ணுக்கு WhatsAppஇல் அனுப்பலாம்.
2024 ஏப்ரல் 25 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு WhatsApp செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த விண்ணப்பம் மற்றும் பதிவுக்கு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது.
வசத் சிரிய மரதன் ஓட்டப் போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் பங்குபற்ற முடியும். www.pmd.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளீர்கள் என்பதை பதிவு செய்யப்பட்ட அரச மருத்துவர் ஒருவர் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர், “இலங்கை இராணுவ விளையாட்டு மருத்துவப் பிரிவு, இராணுவ விளையாட்டு அபிவிருத்தி கிராமம், இராணுவ காலனி, பனாகொட, ஹோமாகம” எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையின் மேல்பக்க இடது மூலையில் “வசத் சிரிய திறந்த மரதன் போட்டி 2024” என்று குறிப்பிட வேண்டும்.
இல்லையெனில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தெளிவான படத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவின் 0710573828 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்ப முடியும். 2024 ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
‘வசத் சிரிய- சிங்கள இசை நிகழ்ச்சி’அன்றிரவு 7.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிரபல பாடகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.