கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மையின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், பணமோசடி சட்டம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
வாங்கிய ஒரு காணியில் உள்ள வீட்டில் பாதுகாப்புப் பிரிவுகள் இருப்பதாகவும், குளிர் அறைகளில் பன்னிரெண்டு நாய்கள் வசதியாக வளர்க்கப்படுவதாகவும், இங்கு நீச்சல் குளங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.