எதிர்வரும் 24 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி , பேலியகொடை , வத்தளை , ஜா – எல , கட்டுநாயக்க ,சீதுவை , களனி , பியகம , மஹர , கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.