follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2'மைத்திரியை வழக்குகளில் இருந்து காப்பாற்றவே விஜயதாசவுக்கு தலைமை'

‘மைத்திரியை வழக்குகளில் இருந்து காப்பாற்றவே விஜயதாசவுக்கு தலைமை’

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அவர் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர் அல்ல என்றும், அவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, அரசியல் குழு அல்லது கட்சியின் வேறு எந்த முக்கிய இடங்களிலும் பங்குபற்றவில்லை என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்க அமைச்சராக இல்லையா என்றும் துமிந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக 400 முதல் 500 வரையான வழக்குகள் இருப்பதாகவும், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எந்த தொகைக்கு விற்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று சபையின் 116 உறுப்பினர்களில் விஜயதாச ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போதிலும், 116 தலைவர்கள் இருந்த போதும், அந்த நிகழ்வில் ஆசன அமைப்பாளர்கள் உட்பட நிறைவேற்று சபையின் பெரும்பான்மையானோர் கலந்துகொண்டதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...