follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

Published on

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு மனித பாவனைக்கு தகுதியற்றவை என இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் வைக்கப்பட்டவையே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 அரிசி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், சுவையாளருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, அவை மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...