follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

மாணவர்களுக்கு வழங்கவிருந்த மதிய உணவின் அரிசி தரமற்றது?

Published on

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு மனித பாவனைக்கு தகுதியற்றவை என இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் வைக்கப்பட்டவையே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 அரிசி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், சுவையாளருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, அவை மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...