follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2ஜூலை முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்

ஜூலை முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்

Published on

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் மேல் இடது மூலையில் பயணிகள் பார்க்கக் கூடிய வகையில் கட்டணத்தை காட்டும் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...