follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகெரவலபிட்டிய மின் இணைப்புக்கான தடைகள் நீக்கம்

கெரவலபிட்டிய மின் இணைப்புக்கான தடைகள் நீக்கம்

Published on

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை நிறைவுசெய்யப்படாத கெரவலபிட்டிய – நுகபே 33,000 கிலோவோட் மின் இணைப்புக்கான தடைகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது முத்துராஜவெல ஈரநிலத்திற்கு மேல் அமைக்கப்பட்டுவரும் கெரவலபிட்டிய – நுகபே 33,000 கிலோவோட் மின் இணைப்புக்கு சுற்றாடல் அனுமதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும், அரச நிறுவனமொன்றின் ஆட்சேபனை காரணமாக இப்பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்ததுடன், அதற்கமைய, தடைகளை நீக்கி கெரவலப்பிட்டிய – நுகாபே 33,000 கிலோவொட் மின் இணைப்பை அமைப்பதற்குள்சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இப்பகுதியில் 8 தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நடத்த சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கையை எதிர்கால குழு கூட்டத்தில் பரிசீலிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...