follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2புத்தாண்டுக்கு பின்னரான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை

புத்தாண்டுக்கு பின்னரான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை

Published on

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதியமைச்சு இரண்டு புதிய அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டங்களை தயாரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் என்பன இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் விஜயதாச ராஜபக்ச முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றமையும் விசேட அம்சமாகும்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...