follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2On Arrival விசா பிரச்சினை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

On Arrival விசா பிரச்சினை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

Published on

On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது, எனவே நாங்கள் ஏப்ரல் 17 வரை VFS அமைப்பு மூலம் அதை செய்ய காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“VFS தொடர்பாக எங்களுக்கு ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டது. வெளிநாட்டிற்குச் செல்லும் அனைவருக்கும் VFS என்றால் என்ன என்று தெரியும். இது 151 நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் நிறுவனம்.

அந்த சேவைக்கு போட்டியாக யாரும் இல்லை. அவர்கள் உலகிலேயே நம்பர் ஒன். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் VFS ஐப் பயன்படுத்துகிறது. இது இந்திய நிறுவனம் என குற்றச்சாட்டு இருந்தது.

இந்தியர்கள் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என கூறினார். நான் சென்று பார்த்தேன். அப்படியாருமில்லை. VFS ஒரு இந்திய நிறுவனம் அல்ல.

Black Stone தான் முக்கிய பங்குதாரர். அவர்கள் யார், இலங்கையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை VFS இன்று வெளியிடவுள்ளது.

மே 1 ம் திகதி இந்த பிரச்சினை தொடங்கியது. கவுண்டர்களில் இந்தியர்கள் இருக்கவில்லை இலங்கையர்களே இருந்தார்கள். பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. 13 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இந்தியர்கள் என்று கத்தினர். மேலும் VFS விசா வழங்க முடியாது. நிராகரிக்க முடியாது. இது குடிவரவு அலுவலகத்தால் செய்யப்படுகிறது..”

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...