follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்

Published on

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,

“இது தொடர்பாக நீதித்துறை விவகாரம் உள்ளது. ஒரு கட்டத்தில், 61 வயது வரை நீட்டிக்க சம்மதித்தோம். அது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தோம். 61 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு இல்லை.”

இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு நியமிக்கப்பட முடியும் எனவும், தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...