தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளின்படி ஆங்கிலப் பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 10, 11, 13 மற்றும் 20ம் திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.