ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.