follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1"ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்"

“ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்”

Published on

பிரஜை அல்லாத ஒருவர் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன் மூலம் கட்சிப் பதிவுகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி டயானா கமகேவுக்கு சொந்தமானது என்று பலர் கூறுகின்றனர்.

இது தொடர்பில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்து வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி மங்கள சமரவீரவினால் பதிவு செய்யப்பட்டதாக அங்கு அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமையால் சில தவறான வழிகாட்டுதல்கள் ஏற்பட்டுள்ளதாக எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.

பெப்ரவரி 2020 முதல், ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளராக இருந்தார்.

அதன் தலைவராக சஜித் பிரேமதாச செயல்படுகிறார்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட போது ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக எரான் விக்கிரமரத்ன மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகத்தின் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்து, ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனம் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...