follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது மிகவும் ஆபத்தானது

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது மிகவும் ஆபத்தானது

Published on

சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு மற்றும் அல்கலைன் பட்டன் பேட்டரிகள் (Button batteries) இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கி, காது அல்லது மூக்கில் வைக்கலாம் என்று வைத்தியர் கூறினார்.

இந்த மின்கலங்களை குழந்தைகள் விழுங்கினால், அதன் மின் இரசாயனச் செயற்பாட்டின் ஊடாக குழந்தைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

உணவுக் பாதையின் (உணவுக் குழாய்) முதல் பகுதி இயற்கையாகவே குறுகலாக இருப்பதால், இவற்றை விழுங்கும்போது அதிகபட்ச சேதம் (துளை) ஏற்படக்கூடும் என்றும், விழுங்கப்பட்ட பேட்டரி வயிற்றில் பயணித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனூடாக வயிற்றில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கள் கூட ஏற்படுவதுடன் சுவாசக் குழாய் அடைப்பு காரணமாக உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிறு குழந்தையொன்று இவ்வாறான விபத்தில் சிக்கினால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும், அதுவரை 10 நிமிடங்களுக்கு 2 டீஸ்பூன் சுத்தமான தேனை குழந்தைக்கு முதலுதவியாக வழங்குமாறும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...