follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Published on

கந்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப்பொருட்கள் ஜா-எல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத காலாவதியான 1,769 கிலோ கிழங்கு, 732 கிலோ வெங்காயம், 2,600 கிலோ கடலை, 29 கிலோ பருப்பு, 20 கிலோ அரிசி, 3 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொருட்களானது கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...