follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Published on

கந்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப்பொருட்கள் ஜா-எல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத காலாவதியான 1,769 கிலோ கிழங்கு, 732 கிலோ வெங்காயம், 2,600 கிலோ கடலை, 29 கிலோ பருப்பு, 20 கிலோ அரிசி, 3 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொருட்களானது கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...