follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Published on

கந்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப்பொருட்கள் ஜா-எல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத காலாவதியான 1,769 கிலோ கிழங்கு, 732 கிலோ வெங்காயம், 2,600 கிலோ கடலை, 29 கிலோ பருப்பு, 20 கிலோ அரிசி, 3 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொருட்களானது கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...