follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஉக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

உக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

Published on

சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான தொகையினைப் பெற்றுக்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக அனுப்பியுள்ளனர்.

அவர்கள் யுத்தம் நடத்த செல்லவில்லை, வேலை தேடியே சென்றனர். ஆனால் அவர்கள் இப்போது யுத்த களத்தில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தயாசிறி ஜயசேகர மற்றும் வலேபொட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஜனாதிபதியிடம் கூட தெரியப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சரை ரஷ்யாவிற்கு அனுப்பி தகவல்களை பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...