follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஉக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

உக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

Published on

சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான தொகையினைப் பெற்றுக்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக அனுப்பியுள்ளனர்.

அவர்கள் யுத்தம் நடத்த செல்லவில்லை, வேலை தேடியே சென்றனர். ஆனால் அவர்கள் இப்போது யுத்த களத்தில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தயாசிறி ஜயசேகர மற்றும் வலேபொட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஜனாதிபதியிடம் கூட தெரியப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சரை ரஷ்யாவிற்கு அனுப்பி தகவல்களை பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...