follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

உக்ரேனில் யுத்தத்திற்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

Published on

சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான தொகையினைப் பெற்றுக்கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக அனுப்பியுள்ளனர்.

அவர்கள் யுத்தம் நடத்த செல்லவில்லை, வேலை தேடியே சென்றனர். ஆனால் அவர்கள் இப்போது யுத்த களத்தில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தயாசிறி ஜயசேகர மற்றும் வலேபொட பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஜனாதிபதியிடம் கூட தெரியப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சரை ரஷ்யாவிற்கு அனுப்பி தகவல்களை பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...