ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடுவளை மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இருவரால் 20 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்திருந்த வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.9