காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
இலங்கையில் தற்போது இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அரச வைத்தியர் ஒருவரை நாடுமாறும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்புளூயன்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய காய்ச்சல் நிலையத்திற்கு முன்னர் ஆலோசனை வழங்கியுள்ளார்.