LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மக்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகளை உருவாக்குவதுடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் குறித்த அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றை கருத்திற்கொண்டு LTTE அமைப்பு மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க இந்திய உட்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.