நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை உத்தரவு
இது வெளியிடப்பட்டதா? இல்லை? இந்த உத்தரவை இன்று (15) வெளியிடுவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்றைய தினம்(14) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, முறைப்பாட்டில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.
“கடந்த 12ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் விஜயதாச ராஜபக்ஷ அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கடுவெல மாவட்ட நீதிமன்றம், விஜயதாச ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட விடாமல் தடுத்தார். அந்தத் தடை உத்தரவுக்கு எதிராகவே இன்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மனுதாரர் கோரிய தடை உத்தரவை பிறப்பிக்கும் நிலையில் இந்த நீதிமன்றம் இல்லை. நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என ஜனாதிபதியின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்பின், மனுதாரர் துமிந்த திஸாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.
“கடுவெல மாவட்ட நீதிமன்றத்தினால் எனது கட்சிக்காரருக்கு அது தொடர்பான தடை உத்தரவு அல்லது நோட்டீஸ் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்தத் தடை உத்தரவு எனது கட்சிக்காரருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்க வேண்டும். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் கடந்த 12ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் நடைபெற்றது..”
“இருந்த போதிலும், குறித்த வழக்கு எவ்வாறு கடுவெல மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், மாத்தறை, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்ய முடியும். எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்ய இந்நாட்டு பிரஜைக்கு உரிமை உண்டு, அந்த அடிப்படை உரிமையை மட்டுப்படுத்த முடியாது..” என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, மனுதாரர் கோரிய தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மாவட்ட நீதிபதி, இன்று தனது உத்தரவை அறிவிப்பதாக அறிவித்தார்.