follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

Published on

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்காடாக்க முயல்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இஸ்ரேல் நாட்டினால் வழங்கப்படும் தொழில்களை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். சுமார் 40,000 பேரை அதிக சம்பளம் பெறும் தொழிலுக்கு அனுப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அது நடந்தால் நம் கிராமத்தில் இளைஞர்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் யார் என்ன சொன்னாலும் இஸ்ரேல் நாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்த மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...