follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி ஜூலையில்

ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி ஜூலையில்

Published on

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்;

“ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது. அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால் சில துறைகள் இன்னும் வேலை செய்யவில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...