இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 13 ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்தது.
இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய கப்பல் தாமதமானதால், இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.