follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

தெற்கு காஸா நகரமான ரஃபாவில் தங்கள் இராணுவப் பிரச்சாரத்தை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தும் முயற்சி இது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பலஸ்தீனியர்களை பூமியில் இருந்து துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ரஃபா நகரை தாக்கி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தினால் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் சட்டத்தரணிகள் தற்போது தமது பதிலை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸா பகுதியில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்கா கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஏற்கனவே பரிசீலித்து வருகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...