follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

Published on

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

குறித்த கடிதத்தில், சமூகத்தில் இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளை எச்சரிக்க ஞானசார தேரர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவரது நடவடிக்கைகள் அரச பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கியதுடன், இலங்கையில் சில தீவிரவாதக் குழுக்கள் பரவுவதைத் தடுக்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இலங்கை சமூகத்தில் பல சாத்தியமான தீவிரவாத மோதல்கள் தவிர்க்கப்பட்டதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் வருமாறு;

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...