follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2"ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது" - மஹிந்த புகழாரம்

“ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது” – மஹிந்த புகழாரம்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.

அதில் தெரிவிக்கையில்;

எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது. நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம்.

ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை எதிர்கொண்டாலும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சமமாகத் தாங்கிக்கொண்டாள்.

மனைவியாக, தாயாக, தோழியாக, பாட்டியாக உங்கள் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கெல்லாம் மிக்க நன்றி!

அன்புள்ள ஷிராந்திக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...