சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சார செயலிழப்புகள் மற்றும் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.