follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2"நான் ஷாபிக்கு எதிராக முறையிடவில்லை"

“நான் ஷாபிக்கு எதிராக முறையிடவில்லை”

Published on

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“.. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை. அதாவது குருநாகல் தாய்மார்கள் வழங்கிய முறைப்பாட்டினை குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்க, அதனை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் ஊடகங்களுக்கு தெரிவித்தோம்.

கர்ப்பப்பை சர்ச்சையில் நான் எதுவும் எனது கருத்துக்களை கூறவில்லை. முறையான விசாரணையை கோரினேன் அவ்வளவு தான். என்றாலும் ஷாபியின் வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. அவர் இப்போது மீண்டும் சேவையில் இணைந்துள்ளார். அவர் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது எனக்கு தெரியாது..” எனத் தெரிவித்திருந்தார்.

ஷாபி ஷிஹாப்தீன் அண்மையில் தனக்கு இழைக்கப்பட்ட முறைகேடுகளை வைபவமொன்றில் கருத்தாக தெரிவித்திருந்தார். அதனை மேற்கோள் காட்டியே ஊடகவியலாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஷாபி ஷிஹாப்தீன் கர்ப்பப்பை சர்ச்சை வெறும் அரசியல் தானே என கேள்வி கேட்க, வியர்க்க சற்றே தடுமாறி நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...