follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு

Published on

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தம்மைப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக முன்னிறுத்துவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில் இது சிறந்த வழி என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தம் காரணமாக இது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்ட ரவி கருணாநாயக்க, நகைச்சுவைகளை வழங்காமல் ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியமானது என்கிறார்.

“எங்கள் ஜனாதிபதி மிகவும் ஜனநாயக நபர். பலர் பலவிதமான கதைகளைச் சொன்னாலும், அவரது அரசியல் பயணம் நிச்சயமாக மக்களின் கருத்துக்களுக்குள் பயணிக்கும் ஜனநாயக வழி, வீண் பரசூட் அல்ல. இங்கு நகைச்சுவைகள் தேவையில்லை என்று நினைக்கிறேன். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஜனநாயக ரீதியாக ஏதாவது செய்தல். கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பார். அதன் ஊடாக வெற்றி பெற்று நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வது அவசியமாகும்..” என நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...