follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு குப்பைகளை அனுப்பிய வடகொரியா

பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு குப்பைகளை அனுப்பிய வடகொரியா

Published on

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

தற்போது ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பலூன்கள் சுமந்து வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...