follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2டலஸ் மற்றும் பலர் SJB க்கு.. டலஸுக்கு பெரிய பதவி..

டலஸ் மற்றும் பலர் SJB க்கு.. டலஸுக்கு பெரிய பதவி..

Published on

சுதந்திர மக்கள் பேரவையின் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தலைவராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சரித ஹேரத்துக்கு குளியாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும், லலித் எல்லாவலவுக்கு பாணந்துறை தொகுதி அமைப்பாளர் பதவியும், திலக் ராஜபக்ஷவுக்கு அம்பாறை இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

இந்த குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா உள்ளிட்டோர் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்த போதிலும் அதனை கடுமையாக எதிர்த்தோர் இரண்டாவது தடவையாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டிருப்பதும் விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...