follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2பொஹட்டுவ வேட்பாளரும் பொது வேட்பாளரும் ரணில்?

பொஹட்டுவ வேட்பாளரும் பொது வேட்பாளரும் ரணில்?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஹொரண பிரதேசத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சஞ்சீவ எதிரிமான்ன இங்கு தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கு மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிற்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளதாக வாரப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 6ஆம் திகதி பிற்பகல் அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற விருந்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்காக இந்த விருந்து நடத்தப்பட்டதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தலுக்கு ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் கட்சி அலுவலகத்தை கடந்த 6ஆம் திகதி திறந்து வைத்தார்.

ஜூலை மாதம் தேர்தல் பிரசாரம் தொடங்க திட்டமிடப்பட்டு 40 நாட்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதியில் தேர்தல் நடைபெற வேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அல்லது 12ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...