follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2ஸ்ரீலங்கன் பயணிகளுக்கு உப்பும் மிளகும் கிடையாது.. கணக்கெடுப்பு ஒன்றில் வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் பயணிகளுக்கு உப்பும் மிளகும் கிடையாது.. கணக்கெடுப்பு ஒன்றில் வெளியான தகவல்

Published on

எந்த விமானத்திலும் சுவையான உணவு கிடைப்பது சகஜம். அதேபோன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் இதுபோன்ற சுவையான உணவை விமானத்தில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து, ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ என்ற தேசிய விமான நிறுவனம் தனது விமானங்களில் Economy class பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொட்டலங்களை வழங்குவதை நிறுத்தியதாகவும், பயணிகளின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே அவற்றை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், Economy class பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக்காக மிளகு மற்றும் உப்பு பொதிகள் நிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த இரண்டு பொருட்களும் வணிக வகுப்பினருக்கு தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கருப்பு மிளகு மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுடன் ஒப்பிடும் போது அதிக “பைப்பரின்” உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.

மிளகாயின் கசப்பான, காரமான சுவையைக் கொடுக்க பைப்பரின் என்ற கலவை பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் சிறிய பொதிகளில் மிளகு மற்றும் உப்பை வழங்கியது, ஆனால் Economy class பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவில் இருந்து உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நீக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம், Economy classல் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் மிளகு, உப்பு பயன்படுத்தாததால், பயன்படுத்தப்படாத பாக்கெட்டுகளை கழிவுகளாக வீச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...