follow the truth

follow the truth

August, 29, 2025
Homeஉள்நாடுமக்கள் அதிகம் எங்களை நம்புகின்றனர் - மஹிந்த மகிழ்ச்சி

மக்கள் அதிகம் எங்களை நம்புகின்றனர் – மஹிந்த மகிழ்ச்சி

Published on

அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பதுளையில் தெரிவித்தார்.

இப்போது பொஹட்டுவ குறித்து நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது உடைந்து போனாலும் நாம் எதையும் இழக்கவில்லை. அன்று இருந்ததை விட இன்று நாம் பலமாக இருக்கிறோம். தேர்தல் இல்லாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்யும் என நான் நினைக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது எதுவும் கூறமாட்டோம். சரியான நேரத்தில் சொல்வோம். மக்கள் இப்போது பொஹட்டுவ வெல்வதற்காக காத்திருக்கிறார்கள். மக்கள் கட்சிகளைத் தவிர வேறு எதையும் தேடவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...